Friday, August 14, 2009

குழந்தை வளர்ப்புக்கலை - பகுதி 2 (உடல் + உயிர் = மனம்)

குழந்தை பிறந்தப் பிறகு அதன் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் ஏனென்றல் உடல் நன்றாக இருந்தல்தான் உயிர் தேகம் நன்றாக இயங்கும் உடலும் உயிரும் நன்றாக இருந்தல்தான் மனம் நன்றாக இயங்கும் ஆகவே இந்த பகுதியில் உடல் மற்றும் உயிர் ஆரோக்கியம் பற்றி பார்க்கலாமா....

உடல்

நம் முன்னோர்களின் வாக்குபடி "உடல் வளர்தேன்னே உயிர் வளர்தேன்னே" என்ற திருமூலர் வாக்கு உண்மை. நம் உடலில் கடிகாரம் போல் காலை 03.00 மணி முதல் இரவு 02.59 வரை இரண்டு மணிநேரத்துக்கு ஒரு உடல் உறுப்பு இயங்குவதாக இந்தியா (சித்தா,ஆயுர்வேதம்) மற்றும் சீன மருத்துவ முறைகள் கூறுகின்றன ...... அதை இங்கு பார்ப்போம் .....


காலை 03.00 மணி முதல் 05.00 வரை: நுரையீரல்
புவி ஈர்ப்பு விசை மிகவும் குறைவு (மனம் மிகவும் அமைதியாக இருக்கும்) ஆகையால் தியானம், இறை வழிபாடு, குழந்தைகள் படிப்புக்கு ஏற்ற நேரம்.
குறிப்பு : இந்த நேரத்தில் ஆஸ்துமா உள்ளவர்கள் துங்க முடியாது. இவர்கள் சரியாக 03.00 மணிக்கு எழுந்து 05.00 மணிவரை இரும்மல் தொல்லியல் அவதியுறுவர்.


அதி காலை 05.00 மணி முதல் 07.00 வரை: பெருங்குடல்
இந்த நேரத்தில் காலை கடன்களான மலம் கழித்தல், பல் துலக்குதல், குளித்தல் ஆகியவற்றை செய்யவேண்டும்.
குறிப்பு : மலம் முட்டும்மாவது செய்து இருக்க வேண்டும். ஏன் என்றால் இன்று மருத்துவ மனைகளில் இறப்பவர்களின் 50 சதவிதத்தினர் இறக்கும் தருவாயில் மலம், ஜலம் சரியாக பிரியாமல் இறக்கின்றனர். ஆகவே சிறு வயது முதல் பெரியவர்கள் வரை காலை 05.00 மணி முதல் 07.00 வரைக்குள் மலம், ஜலம் கழிக்கவேண்டும் .

காலை 07.00 மணி முதல் 09.00 வரை :இரைப்பை
இந்த நேரத்தில் காலை உணவை முடித்து இருக்க வேண்டும்.

காலை 09.00 மணி முதல் 11.00 வரை: மண்ணீரல்
நாம் சாப்பிட்ட உணவை மற்ற உறுப்புகளுக்கு பிரித்து கொடுக்கும் நேரம். இந்த வேலை நடந்தால் தான் சுறுசுறுப்பாக இருக்க முடியும். தடைப்பட்டால் அன்று முழுவது சோம்பலாக இருப்பதை உணரலாம். ஆகையால் ......
குறிப்பு : இந்த நேரத்தில் அமுதம் (சாகாவரம் கொடுக்கும் உணவு) கொடுத்தாலும் உண்ண கூடாது என்றனர் நம் முன்னோர்கள். ஆகையால் இந்த நேரத்தில் தண்ணீர் கூட குடிக்கக்கூடாதென்று சொன்னார்கள்.

பகல் 11.00 மணி முதல் 01.00 வரை: இதயம்
இந்த நேரத்தில் தூங்க கூடாது.
குறிப்பு : இந்த நேரத்தில் தூங்கினால் இதய சம்பந்தப் பிரச்சனைகள் வரும்.

மதியம் 01.00 மணி முதல் 03.00 வரை: சிறுகுடல்
இந்த நேரத்தில் மதிய உணவை முடித்திருக்க வேண்டும்.

மாலை 03.00 மணி முதல் 05.00 வரை: சிறுநீரகப்பை
இந்த நேரத்தில் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். ஜலம் கழிக்கவேண்டும்.
குறிப்பு : தினமும் ஏதாவது பழரசம் குடிக்க நினைத்தால் இந்த நேரத்தில் அதை குடிக்க வேண்டும். அதன் பலன் 100% உடம்பில் சேரும்.

மாலை 05.00 மணி முதல் 07.00 வரை: சிறுநீரகம்
குழந்தைகளை விளையாடவும் அல்லது நடைப் பயிற்சி செய்யவும் சிறந்த நேரம். நம் வேர்வை வெளியேற வேண்டும் .

இரவு 07.00 மணி முதல் 09.00 வரை: இருதய உறை
இரவு உணவு சாப்பிடலாம், தியானம் செய்யலாம்.
குறிப்பு : இந்த நேரத்தில் பாலோ, பால் சார்ந்த உணவுகளும் சாப்பிட கூடாது.

இரவு 09.00 மணி முதல் 11.00 வரை: நாளமில்லா சுரப்பிகள்
ஆறுதல் தேடும் நேரம், அறிவுரைகளை ஏற்கும் நேரம் ஆகையால் குழந்தைகளுக்கு அறிவுரை கூற நினைத்தால் இந்த நேரத்தில் கூறினால் குழந்தைகள் (பெரியவர்களும்) கேட்பார்கள்.

இரவு 11.00 மணி முதல் 01.00 வரை: பித்தப்பை
இந்த நேரத்தில் அழ்ந்தத் தூக்கம் தேவை.
குறிப்பு : தூங்கவில்லை என்றால் அழகு, அறிவு, பலம் குறையும்.

இரவு 01.00 மணி முதல் 01.00 வரை: கல்லீரல்
இந்த நேரத்தில் அழ்ந்தத் தூக்கம் தேவை.

இவ்வாராக இந்த காலச் சக்கரத்தில் தன் உடம்பினை பாதுகாத்தால் எந்த ஒரு பாதிப்பும் இல்லாம்மல் சுகமாக வாழ முடியும்.

உயிர்

குழந்தை பிறக்கும் போதே அவர்கள் சாப்பிடும் உணவில் இருந்து வரும் ரசம் ஆண்களுக்கு விந்துவாகவும் , பெண்களுக்கு நாதமாகவும் பிரித்து ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும் (13 வயதிற்குள்) சதை, எலும்பு, மூளை ஆகியவை வளர்ச்சிக்கு தேவையான அளவு எடுத்து கொள்கின்றது. 13 வயதிற்கு மேல் தேவைக்கு அதிகமாக இருக்கும் சமயத்தில் அவைகள் வெளியேறுகின்றது. இதுவே பெண்களின் "பூப்பெய்த்தல்" சம்பவம் ஆகும். இந்த தருணத்தில் காயகல்ப பயிற்சி செய்ய வேண்டும். இந்தப் பயிற்சி அனைத்து பள்ளி கல்லூரிகளில் இலவசமாக நடத்துகின்றனர். தமிழகம் முழுவதும் இவர்களுக்கு கிளைகள் இருக்கின்றன அங்கு நாம் கட்டணம் செலுத்தி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.


நடத்துபவர்கள்:
Shri Vethathiri Maharishi World Community Service Centre (WCSC),
No.26, Second Seaward Street, Valmiki Nagar, Thiruvanmiyur, Chennai - 600 041.

மேலும் விவரங்களுக்கு மற்றும் கிளைகள் http://www.vethathiri.org/

Kayakalpa Course Fees
Individual Rs.100/-
Couple Rs.150/-
Student Rs.25/-

உடல் நலம் பெற உடற்பயிற்சி
உயிர்
வளம் பெற காய கல்ப பயிற்சி

மனநலம்
பெற தியானப் பயிற்சி


உடல்+ உயிர் = மனம்

மனம் சரியாக இயங்கினால் எந்த ஒரு செயலிலும் வெற்றி உறுதி.


1 comment:

கண்ணகி said...

பயனுள்ள பதிவு. தொடர்க. வாழ்த்துக்களுடன்.

LinkWithin

Related Posts with Thumbnails