Thursday, July 15, 2010

குழந்தைகளுக்கு தேவையான பாடம்

சென்ற ஞாயிறுக்கிழமை தினமலர் நாளிதழில் வெளிவரும் வாரமலர் இதழில் வெளிவந்த ஒரு பகுதி மிகவும் என்னை கவர்ந்தது ....... அதை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

குற்றாலத்தில், ஒரு வயதான தம்பதியர் ஷாப்பிங் பண்ணிக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பெண்மணி, குழந்தை அதைக் கேட்டது, இதைக் கேட்டது என்று கூறி, நிறைய விளையாட்டுப் பொருட்களை வாங்கச் சொல்லி, நச்சரித்துக் கொண்டே இருந்தார். கணவர் அதைப் பொருட்படுத் தாமல், ஒரு சிலவற்றை மட்டுமே வாங்கினார். "என்னவோ நம்ம கிட்டப் பணமே இல்லாதது மாதிரி பிசுநாறித் தனம் பண்றீங்களே... குழந்தை ஆசைப் பட் டதை எல்லாம் வாங்கித் தரலாம் இல்ல? அதை ஏன் ஏமாற்றம் அடையச் செய்றீங்க?' என்று கேட்டு, கணவனைக் கோபித்தார். அவரோ அதைச் சட்டையே பண்ணாமல், கிளம்பி விட்டார். பெண்மணி சண்டை போடவே துவங்கி விட்டார். கணவரோ, சிரித்துக் கொண்டே, "வயசான அனுபவம் கொஞ்சம் கூட உனக்கு இல்லையே... இந்தச் சின்ன வயசிலேயே, அதோட மனசுல கேட்டதெல்லாம் கிடைக்கும்; நினைச்ச தெல்லாம் நடக்கும்கிற எண்ணத்தை வளர விடக்கூடாது. ஏமாற்றமும் கிடைக்கும்; சகிச்சுக் கிட்டுதான் ஆகணும்கிற மனப்பான்மையை உருவாக்கணும். அப்பதான் எதிர்காலத்திலே ஏமாற்றங்கள் ஏற்படுறப்ப அதுகளாலே சகிச்சுக் கவும், சமாளிக்கவும் முடியும். அதுக்காகத்தான் இப்பவே பயிற்சி தர்றேன்...' என்றார். புரிந்து கொண்ட பெண்மணி தலையை ஆட்டி னார். தேவையான பாடமல்லவா இது!

ரூபாய் 1000 பரிசு பெற்ற - இது உங்கள் பக்கம் - என்ற பகுதியில்
— ஆ.கல்யாணி, தோவாளை,

நன்றி: தினமலர்

Monday, July 12, 2010

தமிழகத்தில் நடக்கும் கொடுமை - தூக்கு மேடையாகும் கல்லூரிகள்

இன்று கல்வி என்பது சேவை நோக்கம் இல்லாமல் வியாபாரமாக மாறிவிட்டது. நிறைய கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்லூரிகளில் சேர சொல்லி தொலைக்காட்சி/வானொலி/நாளிதழ் ஆகியவற்றில் விளம்பரங்கள் செய்கின்றனர். பெற்றோரும் மாணவர்களும் அந்த விளம்பரங்களை பார்த்து கல்லூரியின் தரங்களை மதிப்பிடாமல் விளம்பரங்களை பார்த்து சேர்த்து விடுகின்றனர். ஆனால் பல்வேறு கனவுகளுடன் வந்த மாணவர்கள் ....... கல்வி நிறுவனங்கள் கொடுக்கும் இன்னல்களால் தற்கொலை/தூக்கு ஆகிய முடிவுகளுக்கு வருகின்றனர். ஆனால் பெற்றோர்களோ பையன் பட்டதாரியாக வருவான் என்ற கனவில் சொந்த நிலங்களை விற்று/கடன் வாங்கி படிப்பு தொகை/நன்கொடை ஆகியவற்றை கட்டிக்கொண்டு இருப்பர் .......... ஆனால் பையனோ வந்தது ............

மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் :

கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் மீது திணிக்கும் பிரச்சனைகள்:

1. இந்தியா/தமிழகம் ஆகியவற்றில் தலைசிறந்த கல்லூரியாக வர வேண்டும் என்ற நோக்கில் மாணவர்களின் பட்டிப்பு நேரத்தை அதிகரித்து மன உளைச்சலை ஏற்படுத்துதல்.

2. சரியாக படிக்காத மாணவர்களுக்கு தண்டனை வழங்குதல்.

3. மாணவர்கள் செய்யும் சிறு சிறு தவறுக்களுக்கு சட்டத்திட்டம் என்று சொல்லி மாணவர்களை வகுப்பு அறைக்கு வெளியில் நிற்க சொல்லுதல் போன்ற பல்வேறு தண்டனைக்களுக்கு உட்படுதுத்தல்.

கல்வி நிறுவனங்களின் நோக்கம் எப்படி இருக்க வேண்டும்?

1. கல்வி நிறுவனங்கள் செயல் மீது கவனம் இல்லாமல் செயலின் விளைவு மீது கவனம் செல்லுத்துதல் அதாவது நல்ல கல்வியை வழங்கவேண்டிய நிர்வாகம் அதன் மூலம் வரும் நன்கொடை /லாபம்/புகழ் ஆகியவற்றிலே கவனம் செலுத்துகின்றனர்.

2. நல்லா படிக்கின்ற மாணவர்களை எல்லாம் சேர்த்துக்கொண்டு சிறந்த கல்லூரி/பள்ளி என்று பெருமைப்பட்டுக்கொள்கின்றனர்

இதை தவிர்க்க ....

1. விவசாயி இன்னும் செயல் மீது கவனம் செல்லுத்துவதால் (காதல்/பற்று) தான் இன்னமும் அரிசி, மாம்பழம், கத்தரிக்காய் ....ஆகியவற்றை பயிர் செய்துகொண்டு இருக்கின்றான்....செயலின் விளைவு மீது கவனம் செலுத்தி இருந்தால் (பணம்) என்றோ கஞ்சா/அபின் போட்டு சம்பாதித்து இருப்பான். விவசாயி தன் தொழில் மீது காதல் கொண்டது போல் கல்வி நிறுவனங்கள் அவர்களது செயல் மீது கவனம் செலுத்த வேண்டும்.

2 . நல்லா படிக்கின்றவர்களை எல்லாம் என்னிடம் (கல்லூரி/பள்ளி) கொடுங்கள் நான் 100% தேர்ச்சி தருகின்றேன் என்றால் அது கல்லூரி/பள்ளி யும் அல்ல அவர்கள் ஆசிரியர்களும் அல்ல அவர்கள் கூலி தொழிலாளிகள் ...... நான் விமர்சிக்கவில்லை ...... கல்லூரி/பள்ளி மற்றும் ஆசிரியர்கள் அவர்களின் தொழில் தர்மம் அங்கு இல்லை ......... ஏய் படிப்பு வராத மாணவனா என்னிடம் கொடுங்கள் நான் அவர்களை 100% தேர்ச்சி தருகின்றேன் என்றால் அவர்களிடம் ஆசிரியர்களின் தர்மம் உள்ளது

நன்றி: இந்தியாடுடே


Thursday, March 25, 2010

குழந்தைகளை கொஞ்சம் பழக விடுங்கள்

சமீபத்தில் என் நெருங்கிய நண்பரோடு, நண்பரின் குடும்ப விழாவிற்கு அவரது உறவினர்கள் வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்க நானும் சென்றேன். உறவினர் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினோம். கதவை திறந்தவுடன் வீட்டில் உள்ள பெரியவர் எங்களை வரவேற்க வீட்டின் மற்றொரு பெண் ஒருவர் மூன்று குழந்தைகளை ஒரு அறைக்கு செல்ல ஆணை பிறப்பித்தார்.....அந்த குழந்தைகள் விருப்பம் இல்லாமல் செல்வதை பார்க்க முடிந்தது. இந்த காலத்தில் குழந்தைகளை மற்றவர்களிடம் பழக விடுவதில்லை, உறவினர்கள் எவரையும் அறிமுகம் படுத்துவதில்லை......ஏன் இந்த நிலை ..... ஏன் அந்த குழந்தைகளை மற்றொரு அறைக்கு போக சொல்ல வேண்டும்.


வீட்டின் பெரியவர்கள் தான் குழந்தைகளை மற்றவர்களோடு பழக வாய்ப்பு அளிக்க வேண்டும். வீட்டின் அருகில் உள்ளவர்கள், பள்ளி/கல்லூரி நண்பர்கள் , உடன் பணிபுரியும் நபர்கள் ஆகியோர்களை சகோதர /சகோதிரிகளாக நினைக்கும் படி உறவின் சுகங்களை உணர வைக்க வேண்டும். ஆனால் இப்போது பத்தாம் வகுப்பு மாணவி உடன் படிக்கும் மாணவனை காதலித்து தோல்வி பயத்தால் தற்கொலை ......... சகோதரனாக பார்க்க வாய்ப்பை உருவாக்கி கொடுக்கவில்லை இந்த சமுதாயம் ....... வீட்டில் ஒரே குழந்தை மட்டும் இருப்பதால் ......... இந்த சகோதரத்துவம் இல்லாமலே சுயமாக வாழ பழகி விட்டனர். நிலைமை இப்படி இருக்க குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய நாம் ............ சொத்துக்காக, பணத்துக்காக சண்டைபோட்டுநீதிமன்றத்துக்கு சென்று கடைசியில் (சகோதரன்) சகஉதிரத்தைக் கூட கொல்லக் கூடதயங்குவதில்லை.

குழந்தைகளை மற்றவர்களோடு பழக விடாமல் இருக்கும் நிலைமை தொடர்ந்தால்........மற்றவர்களோடு பழகாமல் எதாவது செயலுக்கும் மற்றவர்களை நாடும் பொழுது .... உதவி கேட்கக்கூட .தயக்கம் தயக்கம் தயக்கம்....இந்த தயக்கம் எந்தவிதமுன்னேற்றத்துக்கு வழிவகுக்காமல்......எந்த ஒரு சிறு செயலுக்கு நம் வீட்டுபெரியவர்களை ...... நாட வேண்டியுள்ளது.........ஆகவே தயவு செய்து குழந்தைகளை மற்றர்வர்களிடம் விளையாட அனுமதித்து பழக வாய்ப்பு கொடுங்கள்.

குழந்தைகளை தூங்க விடுங்க.....


நன்றி : தோழி மாத இதழ்

குழந்தைகள் சண்டை போடணும்




நன்றி: தோழி மாத இதழ்

Sunday, March 21, 2010

தலை கீழா நின்னாலும் உனக்கு படிப்பு வராது....

அந்த காலத்துல தலை கீழா நின்னா படிப்பு நல்லா வரும் என்று சிரசாசனம் (யோகா) செய்வார்கள். ஆக தலை கீழா நின்னா படிப்புவருமா?........ படிப்புவரும் என்பது உண்மை. சிரசானம் பற்றிய ஒரு சிறு அறிமுகம் .....

கிங் ஆப் தி ஆசனம், ஆசனங்களின் அரசன் என்று சொல்வது இந்த சிரசானத்தைத் தான், நம் உடம்பினுடைய மொத்த இயக்கங்களின் கட்டுப்பாடும், செயல்பாடும் மூளை நரம்பு மண்டலத்திற்குட்பட்டு இருக்கிறது, இது தலைபகுதியில் மண்டை ஓட்டிற்குள் இருக்கிறது, இந்த மூளை நரம்பு மண்டலத்திற்கு ஆதார சக்தி பிட்யூட்டரி சுரப்பி, உடம்பில் 7 சுரப்பிகள் உள்ளன.

இந்த பிட்யூட்டரி சுரப்பிதான் மற்ற அனைத்து சுரப்பிகளையும் கட்டுப்படுத்துகிறது, நம் வீட்டில் டியூப்லைட். பேன் போன்ற எத்தனையோ மின்சாதனங்கள் இருக்கின்றன, ஒவ்வொரு பொருளை இயக்குவதற்கும் ஒரு தனித்தனியான சுவிட்சின் கட்டுப்பாடு உள்ளது, அனைத்து மின் சாதனங்களுக்கும் வரும் மின்சாரம் நம் வீட்டின் மெயின் போர்டிலிருந்து வருகிறது, மெயின் போர்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் வீட்டின் மொத்த மின்சாரமும் தடைபட்டுவிடும். துண்டிக்கப்பட்டுவிடும், நம் உடம்பில் மின்சாரத்தை சப்ளை செய்யும் மெயின் போர்டுதான் மூளை ஆகும், இந்த சிரசாசனத்தில் உடலின் ஒட்டு மொத்த இயக்கங்களுக்கு ஆதாரமாக இருக்கும் மூளை நரம்பு மண்டலத்திற்கும் பிட்யூட்டரி சுரப்பிக்கும் அதிகபட்சமான இரத்தமும். பிராணசக்தியும் இவ்வாசனத்தில் கொண்டு செல்லபடுவதால் இவ்வாசத்திற்கு ஆசனங்களின் அரசன் என்று பெயரிட்டனர், உடலின் எந்த ஒரு உறுப்பும் இயங்க வேண்டும் என்றால் அதற்கு தேவையான மூலசக்தி இரத்தமும். பிராணசக்தியும் தான், உடல் முழுவதும் இரத்தத்தினுடைய ஓட்டமும் பிராணனுடைய இயக்கமும் சரிசமமாக இயக்கப்படும் போது அனைத்து உறுப்புகளும் இயங்குகின்றன, நோய் என்ற ஒன்று வருவதற்கு வாய்ப்பில்லை,

எந்த ஒரு செயலுக்கும் பிராணசக்தி செயல் மிகவும் முக்கியம்.......படிப்பதற்கு முன்பு சிறிது நேரம் சிரசாசனம் செய்து படித்தால் நல்ல முறையில் புரியும். ஒரு சிறுகுறிப்பு என்னவென்றால் நல்ல யோக குருவிடம் நீங்களோ அல்லது உங்கள் குழந்தையோ இந்த சிரசாசனம் செய்யலாமா என்று கலந்து ஆலோசிக்கவேண்டும்.

ஆகையால் தான் சரியாக படிக்காத மாணவர்களை நீ தலை கீழா நின்னாலும் உனக்கு படிப்பு வராது என்று திட்டுவார்கள் ஆசிரியர்கள்.

Saturday, March 20, 2010

குழந்தை வளர்ப்பு கலை - சுகி. சிவம் அவர்களது பார்வையில்.. Audio



நன்றி : தோழி மாத இதழ்

Wednesday, February 10, 2010

பாசத்திற்கும்,நேசத்திற்கும் ஏங்கும் குழந்தைகள் - குழந்தை வளர்ப்புக்கலை பகுதி-8

பத்தாம் வகுப்பு மாணவன் ரூபாய்.650க்கு சக மாணவனை கொன்றுள்ளான்.பணம் கொடுத்த மாணவன் திருப்பி கேட்கும்பொழுது பள்ளி முதல்வர் மற்றும் தாய், தந்தையோரிடம் சொல்லிவிடுவேன் என்று கூறியதால் பதற்றத்தில் பீங்கானால் அடித்து கொன்றதாக தன்னோட வாக்குமூலத்தில் போலீஸாரிடம் தெரிவித்துள்ளான்.









மற்றொரு
சம்பவம்:- ஒரு வங்கியின் கிளை மேலாளர் தற்கொலை. கடன் தொல்லையில் கடன் கொடுத்தவர்கள் மற்றவர்களிடம் சொல்லி மானத்தை வாங்குவேன் என்று சொன்னதால் பதற்றத்தில் தற்கொலை செய்ததாக கடிதத்தில் எழுதிவைத்து இறந்து உள்ளார்.

மேலே கூறப்பட்டுள்ள இரண்டு சம்பவத்திற்கும் ஒரே காரணத்தை சொல்லலாம்.இந்த காரணத்தை ஆராயும் முன் சின்ன சிந்தனை.

ஒவ்வொரு மனிதனும் தன் எண்ண ஓட்டத்திற்கு வாழாமல் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைத்து தான் நினைத்தபடி வாழாமல் மற்றவர்கள்(சமூகம்) நினைத்தபடி வாழ்ந்து வாழ்க்கையின் பல இன்பங்களை தொலைத்துவிடுகின்றனர்.எடுத்துக்காட்டாக ஒரு மஞ்சள் நிற சட்டை என் விருப்பத்திற்கு நான் வாங்கி போட்டுக்கொண்டு அந்த சட்டை நன்றாக இருக்கிறது மற்றவர் அங்கீகரிக்க எதிர்பார்க்கிறோம்(மச்சி இந்த சட்டையில அஜித் மாதிரி அசத்துற..விஜய் மாதிரி கலக்குற..).இவ்வாறாக மற்றவர் போல்(அஜித்,விஜய்) நீங்கள் இருக்கிறீர்கள் என்று அந்த சட்டைக்கு மற்றவர்களுடைய(சமூகம்) அங்கீகாரம் தேவைப்படுகிறது.யாரவது ஒருவர் இந்த சட்டை நன்றாக இல்லை என்று சொன்னால் அந்த சட்டை மறுபடியும் விரும்பி போடமாட்டோம்.இவ்வாறாக வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயங்களிலும் இந்த சமூகத்தின் அங்கீகாரம் ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கு தேவைப்படுகிறது.

இவ்வாறாக தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்ற சுயசிந்தனை இல்லாமல், இந்த பிரச்சினை எப்படி கையாள்வது என்ற நோக்கம் இல்லாமல், ஒரு சில நொடிகளில் பதற்றத்தில் எடுக்கப்படுகின்ற இந்த ஒரு முடிவுதான் மாணவனை கொலைசெய்தல், பல வங்கி ஊழியர்களை கையாளுகின்ற நல்ல கல்வித்திறன் கொண்ட, மனபக்குவம் கொண்ட ஒரு வங்கி மேலாளர் பதற்றத்தில் சில நொடிகளில் எடுத்த இந்த தற்கொலை முடிவு என்றால்...சிறு குழந்தைகளையோ/மாணவ-மாணவியர்கள், படிக்காத பாமர மக்களையோ,ஏன் இவ்வாறு தவறு செய்தார்கள் என்று நாம் எப்படி குறை சொல்ல முடியும்.

இதை சரி செய்ய என்ன செய்யலாம்....



சில ஆண்டுகளுக்கு முன்னால் நம் வீட்டு பெரியவர்கள் பொய் சொல்லக்கூடாது,திருடக்கூடாது,மற்ற உயிரினங்களை துன்பப்படுத்தக்கூடாது,வயதில் மூத்தவர்களை மதிக்கவேண்டும், என்று நீதிக்கதைகளையும்,புராணங்களையும், சொல்லி குழந்தைகளை வளர்த்தனர்.குழந்தைகளின் ஆழ்மனமானது பசுமரத்தாணி போல பதிந்துவிடும்.இவ்வாறாக பதியும்பொழுது எதிர்காலத்தில் சின்னதவறு கூட செய்யநினைக்காது மனம்.ஆகையால்தான் நம் முன்னோர்கள் நல்ல விஷயங்களை பார்ப்பது, நல்ல விஷயங்களை செய்வது என்று நல்ல எண்ணங்களை குழந்தைகளின் மனதில் தூவிவிட்டனர். ஆகையால் அனேகமான பிரச்சனைகள் அந்தகாலங்களில் கிடையாது.ஆனால் இப்பொழுது குழந்தைகளின் மாலைப்பொழுது புத்தகத்தை மனப்பாடம் செய்யவே செலவிடப்படுகிறது.விளையாட்டு நேரங்களில் கூட தொலைக்காட்சி,(jetix-power rangers) கம்யூட்டர் கேம்ஸ்,போன்றவையே குழந்தைகளின் மனதில் ஆக்கிரமித்துள்ளன.பிறகு எப்படி அவர்களுடைய மனம் நல்ல சிந்தனைகளை தூண்டும்....ஏனென்றால் இன்று அனேக வீடுகளில் குழந்தைகளுக்கு கதை சொல்ல தாத்தா பாட்டி இல்லை.அப்படியே இருந்தாலும் அவர்களுக்கு மரியாதை இல்லை.சீர்படுத்த வேண்டிய தாய்,தந்தையர் இயந்திரத்தனமான உலகத்தில் பணம் சம்பாதிக்க பணத்தைதேடி அலைகின்றனர்.குழந்தைகள் எப்பொழுதும் பாசத்திற்கும்,அன்பிற்கும்,சொந்தங்களுக்கும் ஏங்குகின்றன.அதற்கான சந்தர்ப்பங்களை பெற்றோர்கள் கொடுக்க வேண்டும்.






இவ்வாறாக மனித வாழ்க்கை ஒரு சங்கிலி தொடர்போல அமைந்துள்ளது.ஆகையால் வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் ஏற்படும் ஒரு இழப்பு(தாத்தா,பாட்டி இல்லாமல் தனிக்குடித்தனமாக வாழ்வது) அவனுடைய வாழ்க்கை முழுவதும் பிரதிபலிக்கின்றது.

இந்த விஷயத்தை பற்றி காலையில் ஸ்வாமி ஓம்கார் அவர்களிடம் கருத்து பரிமாற்றம் செய்யும் பொழுது அவர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு விஷயம் குழந்தைகளுக்கு எந்த ஒரு விஷயத்தையும் நாம் சொல்லிக்கொடுக்க தேவையில்லை. ஒவ்வொரு பெற்றோரும் தர்மத்தின்படி ஒழுக்கநெறியுடன் வாழ்ந்தால் குழந்தைகளும் அவ்வாறே வாழ்வார்கள். இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பெற்றோரும் தனிநபர் ஒழுக்கத்தோடு வாழும்போது வெற்றி நிச்சயம்..

இது எவ்வாறு சாத்தியம் என்றால் இன்று எவ்வளவோ புத்தகம் வந்து இருந்தாலும் திருக்குறளுக்கு நிகராக எந்த ஒரு புத்தகமும் உயிர்வாழ்வதில்லை. காரணம் திருவள்ளுவர் ஒரு குறளை எழுதுவதற்குமுன் அந்த குறளின்படி வாழ்ந்தார்,எழுதினார் இன்னும் அந்த புத்தகம் உயிரோடு இருக்கிறது.ஆகையால் குழந்தைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்தால் நம் குழந்தைகளும் அவ்வாறே வாழ்வார்கள்..ஆனால் நம் பெற்றோர்கள் குழந்தைகளை பொய் சொல்லாதே என்று அடித்து கண்டித்து வளர்க்க முற்பட்டாலும் நாம்(பெற்றோர்கள்) பொய் சொன்னால் நம் குழந்தையும் பொய் சொல்லும் என்பது மாற்ற முடியாத உண்மை.

Saturday, January 30, 2010

சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களது பார்வையில் குழந்தை வளர்ப்பு - குழந்தை வளர்ப்புக்கலை பகுதி - 7



நன்றி
ஈஷா யோகா மையம், கோயம்புத்தூர்

LinkWithin

Related Posts with Thumbnails