Tuesday, December 16, 2008

உங்கள் கடவுள் நம்பிக்கை உண்மையா? இங்கே சோதனை பண்ணுங்கள்


ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாத ஆண்மகன் மலைப் பாங்கானப் பகுதியில் நடத்து சென்று கொண்டு இருந்தான். ஒரு மரத்தின் வேர் அவனது காலில் பட்டு மலையின் கீழே விழ நேர்ந்தது. கீழே உருலும் போது மனதில் சிறியப் பயம் உருவாகியது. அவன் நினைத்தான் கடவுள் என்று ஒருவர் இருந்தால் என்னைக் காப்பாற்றட்டும் என்று. அவன் நினைத்தவுடன் ஒரு மரக் கிளைத் தடுத்து அவன் தொங்கிகொண்டிருந்தான். அப்போது அவன் மனம் நினைத்தது நாம் கடவுளை அரைகுறையாக நம்பினோம் அரைகுறையாக காப்பாத்தப்பட்டோம் முழுமையாக நம்பினால் முழுவதுமாக காப்பாத்தப்படுவோம் என்று நினைக்க ........ மேலிருந்து ஒரு சப்தம் கேட்டது மகனே இப்போதவது நீ நம்புகிறாயா? .... சரி நீ என்னை (கடவுள்) அரைகுறையாக நம்பினாய் அரைகுறையாக காப்பாத்தப்பட்டாய் நீ என்னை முழுவதுமாக நம்பினாய் என்பதற்கு மரக் கிளையிலிருந்து கையை எடு நான் உன்னை மீண்டும் காப்பாத்துகின்றேன் என்றது.

நம்மில் எதனைப் பேர் கையை விடுவோம்...

உங்கள் மனதில் எந்த எண்ணம் முதலில் தோன்றியதோ (கையை எடுப்பது அல்லது எடுக்காமல் இருப்பது) அதுவே நீங்கள் கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கை.

என் வாழ்க்கையில் நிறையக் கருத்துகளில் என்னைக் கவர்ந்தது மட்டும் இல்லாமல் சிந்திக்க வைத்த திரு.சுகி.சிவம் அவர் அண்ணாமலையார் அற்புதங்கள் என்ற ஒலி நாடாவில் சொல்லிய நான் ரசித்த இந்தக் கதை என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

நன்றி:
திரு.சுகி. சிவம்
தமிழகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர் ற்றும் சமய சொற்பொழிவாளர்

"""என்னுடைய வலைப்பூவில் திரு. சுகி.சிவம் அவர்கள் சொன்னக் கதையைப் பயன்படுத்தியதைப் பார்த்த அவர்கள்(திரு. சுகி.சிவம்) எனது வலைப்பூவைச் சுட்டிக்காட்டியது மட்டும் அல்லாமல் படித்து 17.12.2008 அன்று எனக்கு வாழ்த்து மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.......நன்றி அய்யா"""





3 comments:

MUTHU said...

super

Raj said...

//மகான் திரு.சுகி.சிவம்....தமிழகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர் மற்றும் சமய சொற்பொழிவாளர்//

இது கொஞ்சம் ஓவர்!!!!!!!!!!!!!!

Anonymous said...

super

LinkWithin

Related Posts with Thumbnails