

வீட்டின் பெரியவர்கள் தான் குழந்தைகளை மற்றவர்களோடு பழக வாய்ப்பு அளிக்க வேண்டும். வீட்டின் அருகில் உள்ளவர்கள், பள்ளி/கல்லூரி நண்பர்கள் , உடன் பணிபுரியும் நபர்கள் ஆகியோர்களை சகோதர /சகோதிரிகளாக நினைக்கும் படி உறவின் சுகங்களை உணர வைக்க வேண்டும். ஆனால் இப்போது பத்தாம் வகுப்பு மாணவி உடன் படிக்கும் மாணவனை காதலித்து தோல்வி பயத்தால் தற்கொலை ......... சகோதரனாக பார்க்க வாய்ப்பை உருவாக்கி கொடுக்கவில்லை இந்த சமுதாயம் ....... வீட்டில் ஒரே குழந்தை மட்டும் இருப்பதால் ......... இந்த சகோதரத்துவம் இல்லாமலே சுயமாக வாழ பழகி விட்டனர். நிலைமை இப்படி இருக்க குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய நாம் ............ சொத்துக்காக, பணத்துக்காக சண்டைபோட்டுநீதிமன்றத்துக்கு சென்று கடைசியில் (சகோதரன்) சகஉதிரத்தைக் கூட கொல்லக் கூடதயங்குவதில்லை.
குழந்தைகளை மற்றவர்களோடு பழக விடாமல் இருக்கும் நிலைமை தொடர்ந்தால்........மற்றவர்களோடு பழகாமல் எதாவது செயலுக்கும் மற்றவர்களை நாடும் பொழுது .... உதவி கேட்கக்கூட .தயக்கம் தயக்கம் தயக்கம்....இந்த தயக்கம் எந்தவிதமுன்னேற்றத்துக்கு வழிவகுக்காமல்......எந்த ஒரு சிறு செயலுக்கு நம் வீட்டுபெரியவர்களை ...... நாட வேண்டியுள்ளது.........ஆகவே தயவு செய்து குழந்தைகளை மற்றர்வர்களிடம் விளையாட அனுமதித்து பழக வாய்ப்பு கொடுங்கள்.